மின்சாரக் கட்டணக் குறைப்புடன், நீர்க் கட்டணமும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (11.01.2024) பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மக்களுக்கு அதிகபட்ச உதவிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் கூறினார். “எதிர்காலத்தில் தண்ணீர் கட்டணத்திற்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவோம். இந்த அழுத்தத்திற்கு மக்களை நாங்கள் உட்படுத்த மாட்டோம்” என்றார்.

தண்ணீரை சுத்திகரிக்கத் தேவையான முக்கியக் காரணிகளில் ஒன்று மின்சாரம். எனவே மின் கட்டணம் குறைந்தால் தண்ணீர் கட்டணம் கண்டிப்பாக குறையும் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here