நுவரெலியாவில் இன்று(8) காலை இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நுவரெலியா – பம்பரகலை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
நுவரெலியா நகரில் பழங்கள் விற்பனை செய்யும் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் இக் கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்தவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கத்தியால் குத்திய வியாபாரி தானாகவே நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.